பெண்ணை கொன்றது நியாயமாம்!
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில், ஓடும் ரயிலில் இருந்து, போலீசாரால், கீழே தள்ளப்பட்ட பெண் இறந்த விவகாரத்தில், 'போலீசார் செயல், சரியானது தான்' என, கோர்ட்டில், போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர், ரயில்வே ஸ்டேஷனில், தவறுதலாக, முதல் வகுப்பு பெட்டியில் ஏறிய தம்பதியை, அந்தப் பெட்டியில், பணியிலிருந்த, ரயில்வே போலீசார் இருவர், ஓடும் ரயிலில், கீழே தள்ளினர். இதில், எதிரே வந்த ரயில் மோதி, மனைவி இறந்தார்; காயங்களுடன், கணவர் உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உள்ளூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. 'ரயில்வே போலீசாரின் செயல் தவறில்லை' என, போலீசார், கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கையை ஏற்கக் கூடாது என, இறந்த பெண்ணின் கணவர், கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment